கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த சொகுசு பஸ் விபத்து - பலர் காயம்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த சொகுசு பஸ் விபத்து - பலர் காயம்


வவுனியாவிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பேருந்து சாலியவேவா பகுதியில் விபத்துக்குள்ளானதில் 10க்கு மேற்பட்ட பயணிகள் சிறுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

வவுனியா - பண்டாரிக்குளம் பகுதியில் பயணிகள் சொகுசு பேருந்து வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி நேற்று மதியம் பயணத்தினை ஆரம்பித்துள்ளது.


$ads={1}

அனுராதபுரம் - புத்தளம் பாதை ஊடாக கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் சாலியவேவா பாடசாலைக்கு அருகே பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளனாது. அதன் பின்னர் பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் அவசர பாதை ஊடாக பேருந்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இவ்விபத்தில் 10க்கு மேற்பட்ட பயணிகள் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரியவருகின்றது. மழை காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.