யாழில் பிரபல ரௌடி தனுரொக் மீது வாள்வீச்சு; நால்வர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

யாழில் பிரபல ரௌடி தனுரொக் மீது வாள்வீச்சு; நால்வர் கைது!


ரௌடி தனுரொக் எனும் நபர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மோகன் அசோக் உள்ளிட்ட நால்வரையும் எதிர்வரும் ஒக்டோபர் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.


இந்தத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ஓட்டுமடத்தைச் சேர்ந்த சுமன் என பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர் தலைமறைவாகியுள்ள நிலையில் இந்த நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


யாழ்ப்பாணம் மணிக்கூட்டு வீதி – பெருமாள் கோவிலடியில் வைத்து நேற்று முன்தினம் (26) மானிப்பாயைச் சேர்ந்த தனுரொக் என்ற பிரபல ரௌடி மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. கார் ஒன்றில் வந்த மர்ம ரௌடிகள் சிலர் மோட்டார் சைக்கிளில் சென்ற ரௌடி தனுரொக் மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டனர்.


சம்பவத்தில் படுகாயமடைந்த தனுரொக், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.


தனுரொக் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் கொக்குவிலைச் சேர்ந்த மோகன் அசோக் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அத்தோடு மேலும் மூவர் நேற்றுக் கைது செய்யப்பட்டனர்.


அத்துடன், காரின் உரிமையாளரை அழைத்து வாக்குமூலம் பெற்ற பொலிஸார், அவரை விடுவித்துள்ளனர். அவரிடமிருந்து வாடகைக்கு காரை பெற்று சென்று தாக்குதல் நடத்தியுள்ளனர்.


சந்தேக நபர்களில் மோகன் அசோக், நேற்று யாழ் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.


கொலை முயற்சி என அவர் மீது குற்றஞ்சாட்டி பொலிஸார் பி அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் சந்தேக நபரை எதிர்வரும் ஒக்டோபர் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.


அத்துடன், மேலும் 03 சந்தேக நபர்கள் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்கள் மூவரையும் எதிர்வரும் 09ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது.


தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி ஓட்டுமடத்தைச் சேர்ந்த சுமன் பொலிஸாரால் கைது செய்யப்படவில்லை.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.