ஒரு கிலோ அரிசியின் விலையினை ஒரு போதும் அதிகரக்கப்படமாட்டாது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஒரு கிலோ அரிசியின் விலையினை ஒரு போதும் அதிகரக்கப்படமாட்டாது!


அரிசியின் விலை சந்தையில் எக்காரணத்தைக் கொண்டும் அதிகரிக்கப்படாது என அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன நேற்று உறுதியளித்தார்.

அரிசியின் செயற்கை தட்டுப்பாட்டை நீக்குதல் நுகர்வோருக்கு சிரமத்தை உண்டாக்கும் செயற்பாடுகள் குறித்து சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சசர் இதனை வெளிப்படுத்தினார்.

நுகர்வோருக்கான அதிகூடிய சில்லறை விலையை அதிகரிப்பதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“நெல்லைப் பதுக்கி வைத்து அவற்றை சந்தைக்கு விடாது விலைகளை அதிகரிக்கும் அரிசி வர்த்தகர்கள் பற்றிய தகவல்கள் ஏற்கனவே எம்மிடம் உள்ளன. செயற்கை அரிசித் தட்டுப்பாட்டை உருவாக்க யாருக்கும் அனுமதியில்லை” என அவர் தெரிவித்தார்.

நுகர்வோரின் நாளாந்த கேள்விக்கேற்ப இருப்பைப் பேணவும் நாட்டில் செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்காது இருக்கவும் அமைச்சரவை அனுமதியுடன் அரசாங்கம் ஏறத்தாழ 100இ000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.

வர்த்தகர்கள் பதுக்கி வைத்திருக்கும் அரிசியை சந்தைக்கு வெளியிட்டால் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவையில்லை என்பதையும் அமைச்சர் வலியுறுத்திக் கூறினார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.