சிலாபத்தில் 23 வயது இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிலாபத்தில் 23 வயது இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதி!


சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியமை உறுதியாகியுள்ளது.
பின்னர் அவர் இரணவில கொரோனா சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் ஆணமடுவ பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளைஞனாகும்.

கடந்த மாதம் 16ம் திகதி டுபாயில் இருந்து இலங்கை வந்த குறித்த இளைஞனுக்கு மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. பின்னர் சிகிச்சைக்காக வெலிக்கந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 3 தடவைகள் பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மூன்று பரிசோதனைகளிலும் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதியாகியுள்ளது.

அதற்கமைய தனிமைப்படுத்தலை நிறைவு செய்தவர் 24ஆம் திகதி தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

திடீர் சுகயீனம் காரணமாக கடந்த 17ஆம் திகதி அவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு மேற்கொண்ட பீசீஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்றியமை உறுதியாகியுள்ளது.

சுயதனிமைப்படுத்தப்பட்ட காலப்பகுதியில் அவர் தனது தாயாருடன் வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் தாயார் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பீசீஆர் பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.