தென்னாப்பிரிக்காவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தில் பணிபுரிந்த இலங்கை ஒருவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் ஞாயிற்றுக்கிழமை (20) இறந்ததாக வெளியுறவு செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பேகே தெரிவித்தார்.
உயிரிழந்தவர் கிளிநொச்சியினை பிறப்பிடமாக கொண்ட 35 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பிரேத பரிசோதனை முடிந்ததும் இறந்தவரின் உடலை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அட்மிரல் கொலம்பேகேமேலும் தெரிவித்தார்