எனக்கும் என்னுடைய கட்சியில் இருந்துகொண்டு புதிய அரசியலமைப்பை ஆதரிக்கும் எவருக்கும் இடையில் தொடர்பு துண்டிக்கப்படும்! -சஜித்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எனக்கும் என்னுடைய கட்சியில் இருந்துகொண்டு புதிய அரசியலமைப்பை ஆதரிக்கும் எவருக்கும் இடையில் தொடர்பு துண்டிக்கப்படும்! -சஜித்

Sajith premadasa

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையிலான அரச நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தை எனது கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றும் எமது பங்காளிக் கட்சியினர் ஆதரித்தால் அவர்களுடன் எனக்கு எந்த அரசியல் தொடர்பும் இருக்காது என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் நாட்டின் நன்மையை மையமாகக் கொண்ட ஒரு திருத்தம் அல்ல, மாறாக ஒரு தனிநபரை இலக்காகக் கொண்டு இந்தத் திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.

இதை நூற்றுக்கு 50 வீதம் வரை அரசு ஏற்கனவே வாபஸ் பெற்றதற்கான தகவல் என்னிடம் இருக்கின்றது.

இந்தச் திருத்தச் சட்டமூலத்தைக் கொண்டு வந்தவர் யார் என்பதை புலனாய்வு சேவைகளால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. குறித்த நபர் தலைமறைவாகியுள்ளார் என தெரிவித்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.