100% கொரோனா ஒழிக்கப்பட்ட பின்னரே விமான நிலையம் திறக்கப்படும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

100% கொரோனா ஒழிக்கப்பட்ட பின்னரே விமான நிலையம் திறக்கப்படும்!


இலங்கையில் சுகாதாரப் பாதுகாப்பு நூறு சதவீதம் உறுதிப்படுத்தப்படும் வரையில், நாட்டிலுள்ள விமான நிலையங்கள் திறக்கப்படமாட்டாது என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் கொரோனா வைரஸை முற்றாக ஒழிப்பதற்கு சுகாதார தரப்பினர் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன்படி நாட்டில் வாழும் 2 கோடியே 20 இலட்சம் மக்களின் சுகாதாரப் பாதுகாப்பு நூறு சதவீதம் உறுதிப்படுத்தப்பட்டு, அது தொடர்பாக சுகாதாரத் தரப்பினர் ஆலோசனைகளை வழங்கும் வரையில் விமான நிலையங்களைத் திறக்க எதிர்பார்க்கவில்லை என குறிப்பிட்டார்.

உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்று நிலைமையைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் இலங்கையில் விமான நிலையங்கள் மூடப்பட்டன.

இந்தக் காலப்பகுதியில் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு மாத்திரம் இலங்கை வரக்கூடிய வகையில் விசேட விமான சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.