கொரோனா தொடர்பாக பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தொடர்பாக பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!


கொரோனா வைரஸ்  தொற்று காரணமாக மூடப்பட்ட சகல பாடசாலைகளும் மாணவர்களுக்காக தற்பொழுது திறக்கப்பட்டுள்ளன.


சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஆலோனைகள் மற்றும் அறிவுறுத்தல்களை உரிய வகையில் பின்பற்றி பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கல்வி அமைச்சு அனைத்து பாடசாலைகளுக்கும் அறிவித்துள்ளது.


பாடசாலை சுற்றாடலை கிருமி தொற்று நீக்குதல், கைகளை கழுவுதல், முக கவசம் அணிதல், நபர்களுக்கு இடையிலான இடைவெளியை முன்னெடுத்தல் உள்ளிட்டவற்றின் மூலம் கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பில் பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து பாடசாலை சமூகத்தினரும் தற்பொழுது முழுமையாக கவனம் செலுத்துவதில்லை என்று சில பாடசாலைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதனால் விசேடமாக பாடசாலை போக்குவரத்து சேவையை வழங்குதல், பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளை முன்னெடுத்தல் உள்ளிட்ட பாடசாலை மாணவர்கள் நேரடியாக தொடர்புபடும் போது இவர்களின் சுகாதாரத்தை உறுதி செய்வது பாடசாலை அதிகாரிகள் உள்ளிட்ட பாடசாலை சமூகத்தினரிற்கு பொறுப்பானதாகும்.


அத்தோடு மாணவர்களின் சுகவீனம் தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்தி சுகாதார பாதுகாப்பு தொடர்பில் ஆக கூடிய வகையில் கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


கொரோனா வைரஸ் தொற்று பரவுவது தொடர்பில் அரசாங்கத்தின் தலையீட்டுடன் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் காரணமாக நாட்டில் கொவிட் தொற்று கட்டுப்படுத்தப்பட்டிருப்பதுடன் உலகின் ஏனைய நாடுகள் மத்தியில் இலங்கை சிறப்பான நிலையில் காணப்படுகின்றது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.