இனி அரசியல்வாதிகளின் சிபாரிசு மூலம் பாடசாலைகளில் மாணவர்களை சேர்க்க இடமில்லை! -ஜனாதிபதி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இனி அரசியல்வாதிகளின் சிபாரிசு மூலம் பாடசாலைகளில் மாணவர்களை சேர்க்க இடமில்லை! -ஜனாதிபதி

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உயர் அரச அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு, பாடசாலைகளில் மாணவர்களை சேர்பதற்காக முன்வைக்கப்படும் கோரிக்கைகளை நிராகரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராகபக்ஷ அறிவித்துள்ளார்.

அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதியினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி, ஜனாதிபதி செயலக அதிகாரிகள், பிரதமர், அலரிமாளிகை அதிகாரிகள் மற்றும் ஏனைய அரசாங்க அதிகாரிகளினது பெயர்கள் குறிப்பிடப்பட்டு, பாடசாலை அதிபர்களுக்கு பரிந்துரை கடிதங்கள் அனுப்படுவது குறித்து அவதானிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில், பாடசாலை அதிபர்கள் இவ்வாறான கடிதங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் ஜனாதிபதியினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், பாடசாலைகளில் மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்காக உள்ள சட்டதிட்டங்களை மாத்திரம் உள்வாங்கி அதிபர்கள் செயற்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நியமங்களை மீறி செயற்படும் அதிபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.