போலி காயங்களுடன் பிச்சையெடுத்த இக்பார், தமயந்தி ஜோடி கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

போலி காயங்களுடன் பிச்சையெடுத்த இக்பார், தமயந்தி ஜோடி கைது!


மக்களை ஏமாற்றுவதற்காக உடல் முழுவதும் தீ காயங்கள் ஏற்பட்டுள்ளதைப் போல காண்பித்து, பிச்சையெடுத்த ஜோடியொன்று பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளது.

அந்த ஜோடிக்கு உண்மையிலேயே தீ காயங்கள் ஏற்படவில்லை. தீ காயங்கள் ஏற்பட்டுள்ளதைப் போல முட்டையை பூசி அந்த ஜோடியினர் மக்களை ஏமாற்றிக்கொண்டிருந்துள்ளனர்.

திட்டமிட்டு இவ்வாறு பிச்சையெடுக்கும் இந்த ஜோடி, கெக்கிராவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


$ads={1}

இந்நிலையில் நன்கு திட்டமிட்டு, ஒருங்கிணைக்கப்பட்டுள்ள குழுவொன்றை மக்களை ஏமாற்றி இவ்வாறு பிச்சையெடுப்பதற்கான வழிவகைகளை செய்துகொண்டுதுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

இன்னும் சிலர், பிச்சை எடுப்பதற்காக, வாகனமொன்றின் ஊடாக, அனுராதபுரத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அந்த ஜோடியினர் தெரிவித்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட இருவரின், ஆண் பிச்சைக்காரர் கொழும்பு பாபர் வீதியைச் சேர்ந்த மொஹமட் இக்பார் (வயது 43) என்றும் மற்றையவர் துஷாரி தமயந்தி ( வயது 43) என்றும் இனங்காணப்பட்டுள்ளனர்.

கைதானவர்களை கெக்கிராவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுது்திய போது, அவர்களை எதிர்வரும் 16ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.