சட்டவிரோதமாக இந்தியா நுழைந்த இலங்கையர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சட்டவிரோதமாக இந்தியா நுழைந்த இலங்கையர் கைது!


சட்ட விரோதமான முறையில், தமிழகத்துக்குள் ஊடுருவ முயன்ற இலங்கையர் ஒருவரை ராமேஸ்வரம் மெரைன் போலிசார் கைது செய்துள்ளனர்.

இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக படகு மூலம் தமிழகத்துக்குள் இலங்கையை சேர்ந்தவர்கள் ஊடுருவியுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து ராமேஸ்வரம் மெரைன் போலிசாருக்கு தனுஸ்கோடி கடற்கரை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.


$ads={1}

அப்போது கம்பி பாடு கடற்கரையில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரை கைது செய்து விசாரணை செய்தனர்.

இதன் போது குறித்த நபர் இலங்கையின் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த பிரதீப் குமார் பண்டாரநாயக்க (30) என தெரிய வந்துள்ளது.

மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர் குறித்து மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.