தாயகம் திரும்பி வைத்தியரை சந்தித்த நபரை விரட்டியடித்த வைத்தியர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தாயகம் திரும்பி வைத்தியரை சந்தித்த நபரை விரட்டியடித்த வைத்தியர்!


டுபாயில் இடம்பெற்ற விபத்தின் பின்னர் நாட்டுக்கு வந்த இலங்கை பணியாளர் ஒருவருக்கு வைத்தியர் உதவி செய்யாமையினால் காப்புறுதி இழப்பீடு பெற முடியாமல் போயுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இலங்கை வெளிவிவகார பணியகத்தின் ஊடாக பாதிக்கப்பட்ட நபர் இழப்பீட்டினை பெறுவதற்கு முயற்சித்துள்ளார்.

அதற்காக வைத்தியர் ஒருவரின் பரிந்துரை பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்கமைய அவர் பரிந்துரையை பெற்றுக் கொள்வதற்காக முல்லேரியா வைத்தியசாவைக்கு சென்றுள்ளார்.

குறித்த பரிந்துரையை வழங்கும் வைத்தியர், வெளிநாட்டில் இருந்து வந்த நபரை திட்டி, அவரது ஆவணங்களை வெளியே எறிந்து அவரையும் வெளியேற்றியுள்ளார் என தெரியவந்துள்ளது.

டுபாயில் சில மாதங்களுகு்கு முன்னர் இடம்பெற்ற விபத்தில் இந்த நபர் பலத்த காயமடைந்துள்ளார். அந்த நாட்டில் சிகிச்சை பெற்று குணமடைந்த பின்னர் அண்மையில் அவர் நாடு திரும்பியுள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.