கொழும்பில் கட்டடம் தாழிறங்கும் அபாயம் - அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட ஊழியர்கள்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பில் கட்டடம் தாழிறங்கும் அபாயம் - அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட ஊழியர்கள்


கொழும்பு, கொள்ளுபிட்டியில் உள்ள இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகார சபை கட்டடத்தின் ஊழியர்கள் திடீரென வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கட்டடத்தின் சுவரில் ஏற்பட்ட பிளவு காரணமாக அச்சத்தில் ஊழியர்கள் வெளியேறியுள்ளனர்.

கட்டடம் தாழிறங்கும் அபாயம் காணப்படும் அச்சத்திலேயே ஊழியர்கள் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த கட்டடத்திற்கு அருகில் மேற்கொள்ளப்படுகின்ற புதிய கட்டட நிர்மாண பணிகள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.