யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ் தேவி கடுகதி இரயில் அநுராதபுரம் – பரசன்கஸ்வெவ பகுதிகளுக்கிடையில் இன்று (25) தடம் புரண்டுள்ளது.
இதனால் வடக்கு மார்க்கத்தினூடான இரயில் சேவைகள் தாமதமடைந்துள்ளதாக இரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
இந் நிலையில், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில், மதவாச்சியில் நிறுத்தப்பட்டுள்ளதாக இரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.