அப்போது குறுக்கிட்ட அமைச்சர் அலி சப்றி, எனக்கு விருப்பமான உடையை நான் அணிக்கின்றேன். என்ன பிரச்சினை?.
இங்கு இனவாதத்தை தூண்ட வேண்டாம், என கடும் கோபத்துடன் பதிலளித்தார்.
இதன் போது குறுக்கிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில், நாடாளுமன்றத்திற்கு புதிதாக தெரிவான இவர், சண்டியன், ரவுடி போல் கோபத்துடன் நடந்து கொள்ளும் விதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.
இது புத்திஜீவி தனமா?. அலி சப்றிக்கு முன்பள்ளியில் பயிற்சி அளிக்க வேண்டும் என யோசனை முன்வைப்பதாக குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் இறுதியில் தான் நடந்து கொண்ட விதம் தொடர்பாக அமைச்சர் அலி சப்றி மன்னிப்பு கோரினார்.