கடும் கோபத்தினை வெளிப்படுத்திய நீதி அமைச்சர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கடும் கோபத்தினை வெளிப்படுத்திய நீதி அமைச்சர்!


டை கோட் அணிந்திருக்கும் நீதியமைச்சர் அலி சப்றி  20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் ஊடாக கடந்த அரசாங்கம் மற்றும் தற்போதைய அரசாங்கத்தில் தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்குவார் என எதிர்பார்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து காரணமாக இரண்டு தரப்பினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது குறுக்கிட்ட அமைச்சர் அலி சப்றி, எனக்கு விருப்பமான உடையை நான் அணிக்கின்றேன். என்ன பிரச்சினை?.

இங்கு இனவாதத்தை தூண்ட வேண்டாம், என கடும் கோபத்துடன் பதிலளித்தார்.

இதன் போது குறுக்கிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில், நாடாளுமன்றத்திற்கு புதிதாக தெரிவான இவர், சண்டியன், ரவுடி போல் கோபத்துடன் நடந்து கொள்ளும் விதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.

இது புத்திஜீவி தனமா?. அலி சப்றிக்கு முன்பள்ளியில் பயிற்சி அளிக்க வேண்டும் என யோசனை முன்வைப்பதாக குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் இறுதியில் தான் நடந்து கொண்ட விதம் தொடர்பாக அமைச்சர் அலி சப்றி மன்னிப்பு கோரினார்.

$ads={2}

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.