சிரேஷ்ட ஊடகவியலாளர் தரிஷா பெஸ்டியன் துன்புறுத்தலுக்குள்ளாவது குறித்து ஐக்கிய நாடுகள் சபை கவலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிரேஷ்ட ஊடகவியலாளர் தரிஷா பெஸ்டியன் துன்புறுத்தலுக்குள்ளாவது குறித்து ஐக்கிய நாடுகள் சபை கவலை!


இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் தரிஷா பெஸ்டியன் தொடர்ந்தும் துன்புறுத்தலுக்குள்ளாவது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர்கள் ஐந்து பேர் இலங்கை அரசாங்கத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், தரிசா பெஸ்டியன் தனது எழுத்துக்களிற்காகவும் இலங்கையில் மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பதற்காகவும் இலக்கு வைக்கப்படுகின்றார் என தெரிவித்துள்ளதுடன் தமது கவலை வெளியிட்டுள்ளனர்.


தரிஷா பெஸ்டியன் தொடர்ந்தும் துன்புறுத்தலுக்கு உள்ளாவதும்,அவரது கணிணி கைப்பற்றப்பட்டு அவரதுதொலைபேசி ஆவணங்கள் பகிரங்கப்படுத்தப்படுவதும் அவரது தகவல் மூலங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என ஐ.நா. அறிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


தரிஷா பெஸ்டியன் அனுபவமிக்க ஊடகவியலாளர் மற்றும் மனித உரிமை பாதுகாவலர் ஆவார், அவர் முன்னர் சண்டே ஒப்சர்வரின் தலைமை ஆசிரியராகவும், நியூயோர்க் டைம்ஸின் நிருபராகவும் பணியாற்றியுள்ளார்.


சட்டவிரோத கொலைகள், அரசியல் ஊழல் மற்றும் தண்டனையற்ற பிரச்சினைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் உள்ளிட்ட இலங்கையில் கடுமையான மனித உரிமை மீறல்கள் குறித்து அவர் எழுதியுள்ளார்.


2009 ஆம் ஆண்டில் தி சண்டே லீடர் பத்திரிக்கையில் சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை மற்றும் 2008-2009 காலப்பகுதியில் இலங்கை கடற்படை ஊழியர்களால் 11 இளைஞர்களை கடத்தி கொலை செய்தமை பற்றியும் தரிஷா பெஸ்டியன் துணிகரமாக செய்தி வெளியிட்டார்.


எனவே இவ்வாறான அச்ச சூழல் காரணமாக பொதுமக்கள் நலன் மற்றும் மனித உரிமை தொடர்பான விடயங்கள் குறித்து எழுதுவதை ஏனைய ஊடகவியலாளர் கைவிடலாம் எனவும் ஐ.நா.வின் அறிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


தரிஷா பெஸ்டியன் மீதான நடவடிக்கைகள் அவரது பணிக்கு அவதூறு ஏற்படுத்தும் நோக்கத்திலானதாகயிருக்கலாம் என நாங்கள் கவலையடைந்துள்ளோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


அத்தடன் அரசியல் மற்றும் மனித உரிமை விவகாரங்கள் குறித்து செய்தி வெளியிடுவதை எழுதுவதை தடுப்பதற்கான முயற்சியாக இதுயிருக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் ஊழியர் ஒருவர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் கடத்தல் தொடர்பான விசாரணையில் பஸ்ரியனின் பெயர் இணைக்கப்பட்டுள்ளது.


இதனை அடுத்து நீதிமன்ற தேடுதல் உத்தரவு அனுமதிக்கு அமைய, நாரஹேன்பிட்டி வீட்டிலிருந்து சி.ஐ.டி.யினரால் பிரபல ஊடகவியலாளர் தரிஷா பஸ்ரியனின் மடிக் கணினி உட்பட இலத்திரனியல் பொருட்கள் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.