பதுளை பகுதியில் மின்சாரம் தாக்கி 15 வயது மாணவர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பதுளை பகுதியில் மின்சாரம் தாக்கி 15 வயது மாணவர் பலி!


மின்சாரம் தாக்கி காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவனொருவர் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


பதுளை, தியத்தலாவை – அலுத்வெல பகுதியைச் சேர்ந்த 15 வயது மாணவனொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  


தியத்தலாவை ஆரம்ப வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தியத்தலாவை – அலுத்வெல தெற்கு பாடசாலையில் 10 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவனே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.


குறித்த மாணவன் தனது வீட்டிலுள்ள குளியலறையில் குளித்து கொண்டிருந்த போது பாதுகாப்பற்ற மின் இணைப்பினூடாக மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கியிருக்கலாமென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.