எமது கட்சி நாடாளுமன்றுக்குள் நுழைவதை தடுக்க பல அமைச்சர்கள் செயற்படுகின்றனர். -ஞானசார தேரர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எமது கட்சி நாடாளுமன்றுக்குள் நுழைவதை தடுக்க பல அமைச்சர்கள் செயற்படுகின்றனர். -ஞானசார தேரர்


எங்கள் மக்கள் கட்சியின் (OPPP) பொதுச் செயலாளரான வடிநகல விமலதிஸ்ஸ தேரரை பல அமைச்சர்கள் திட்டமிட்டு மறைத்து வருவதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.


எமது கட்சி தேசிய பட்டியல் ஆசனம் வழியாக நாடாளுன்றத்திற்கு சட்டப்பூர்வமாக நுழைவதைத் தடுக்க ஒரு பரவலான திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என அவர் கூறினார்.


கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஒரு தேசிய பட்டியல் இடத்தை வென்றதன் பின்னர் OPPP நெருக்கடியில் விழுந்தது.


கட்சி உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்களுக்கு பின்னர் தேசிய பட்டியல் வழியாக ஞானசார தேரரை நியமிக்க ஒரு பொதுவான ஒருமித்த கருத்தை எட்டியிருந்தனர். இந்நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் தேசிய தேர்தல் ஆணையத்தில் வேட்பு மனுவை சமர்ப்பிக்கும் தினத்திற்கு முன்னைய தினம் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.