VIDEO: ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலத்தை இரகசியமாக பதிவு செய்த மௌலவி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலத்தை இரகசியமாக பதிவு செய்த மௌலவி!


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் வாக்குமூலங்கள் பெற்று வரும் நிலையில், இன்றைய தினம் ஞானசார தேரர் மற்றும் அகில இலங்கை ஜாமிஅதுல் உலமாவின் உப செயலாளர் உட்பட மேலும் சிலர் ஆஜராகியிருந்தனர்.


இந்நிலையில், ஞானசார தேரரின் வாக்குமூலத்தை இரகசியமாக தனது சட்டத்தரணி மூலம் உள்ளே எடுத்துவந்த கையடக்க தொலைபேசி மூலம் பதிவு செய்ததை அடுத்து சந்தேகத்திற்கிடமான செயலின் காரணமாக குறித்த மௌலவியை சோதனைக்குட்படுத்திய போது இரகசியமாக பதிவு செய்தது தெரியவந்தது.


பின்னர் அகில இலங்கை ஜாமிஅதுல் உலமாவின் உப செயலாளர் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த சட்டத்தரணியிடமிருந்து அறிக்கைகளைப் பெற பொலிஸ் விசாரணை பிரிவுக்கு ஆணைக்குழுவின் தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.


இந்த சம்பவம் தொடர்பாக அகில இலங்கை ஜமியாத்துல் உலமாவை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகளுக்கு ஜனாதிபதி ஆணையத்தின் தலைமை நீதிபதி தனது ஆழ்ந்த அதிருப்தியை தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.