சிறைக்கைதிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க முடியாது! -கமல் குணரத்ன

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிறைக்கைதிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க முடியாது! -கமல் குணரத்ன


பூஸா சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என பாதுகாப்பு செயலாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.


இன்று (12) பிற்பகல் கண்டியில் வைத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


சிலரது கோரிக்கைகள் நிறைவேற்றக் கூடியதாக இருக்கின்ற போதிலும், சிறைச்சாலைகளுக்குள் இருந்து கைதிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களின் நடவடிக்கைக்கு அச்சமடைந்து இந்த பதவியை வகிக்க முடியாது.


உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் குறித்த சிலரே நாட்டில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுப்பட்ட பாரிய குழுவினராவர் என பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.


சட்டத்தரணிகளை சிறைச்சாலைக்குள் பரிசோதனையின்றி அனுப்பி வைக்குமாறு அவர்கள் கோருகின்றனர்.


அதியுயர் பாதுகாப்பு வலயமாக அந்த சிறைச்சாலை வளாகம் இருக்கின்றபோது, அவர்களது கோரிக்கைகளை ஏற்கமுடியுமா என பாதுகாப்பு செயலாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.