நாய்க்குட்டியால் இருவருக்கிடையில் தகராறு; ஒருவர் பலி! கண்டியில் சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாய்க்குட்டியால் இருவருக்கிடையில் தகராறு; ஒருவர் பலி! கண்டியில் சம்பவம்!


வீடொன்றில் வளர்க்கப்பட்டுள்ள நாய்க்குட்டி பிறிதொரு வீட்டுக்குள் சென்ற விளைவால் இருவருக்கிடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவமொன்று கண்டி - தெல்தொடவத்த பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.


குறித்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வளர்த்துவரப்பட்ட நாய்க்குட்டி கடந்த 10ஆம் திகதி பிறிதொரு நபரின் வீட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.


பின்னர் நாய்க்குட்டி தொடர்பில் தகவலறிந்த நாய்க்குட்டியின் உரிமையாளர் குறித்த நபரின் வீட்டுக்கு சென்றுள்ளார். இதன்போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது மோதலாக மாறியுள்ளது.


இருவருக்கிடையிலான மோதலில் நாய்க்குட்டியின் உரிமையாளர் மேற்கொண்ட தாக்குதலில் மற்றைய நபர் பலத்த காயமடைந்து கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் நேற்று (11) உயிரிழந்துள்ளார்.


சம்பவம் தொடர்பில் நாய்க்குட்டியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.