கோர விபத்தில் மூன்று வயது சிறுமி பலி - மற்றையவர் படுகாயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கோர விபத்தில் மூன்று வயது சிறுமி பலி - மற்றையவர் படுகாயம்!


ஆனமடுவ – நவகத்தேகம பிரதான வீதியின் மஹஉஸ்வௌ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்தில் 3 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

விபத்தில் குறித்த சிறுமியின் தாயும், தந்தையும் படுகாயமடைந்த நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நவகத்தேகம பிரதேசத்திலிருந்து ஆனமடுவ பகுதியை நோக்கி கணவனும், மனைவியும் தமது 3 வயது பெண் பிள்ளையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர்.

இதன்போது, கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டுவிலகி வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த 3 வயது சிறுமி உட்பட அச்சிறுமியின் தாயும், தந்தையும் ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறுமி மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கும், பெற்றோர்கள் புத்தளம் தள வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டனர்.

எனினும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த சிறுமி அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் சிறுமியின் சடலம் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த தாயும், தந்தையும் புத்தளம் தள வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் விபத்து தொடர்பில் ஆனமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.