20ஆவது திருத்தச்சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

20ஆவது திருத்தச்சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

அரசியலமைப்பின் 20ஆம் திருத்தச் சட்டமூல வரைவிற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

19ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி 20ஆம் திருத்தச்சட்டத்தை கொண்டு வர ஏற்கனவே அமைச்சரவை அனுமதியளித்திருந்தது.

இதன்படி, நீதியமைச்சினால் தயாரிக்கப்பட்ட 20ஆம் திருத்தச் சட்டமூலத்தின் வரைவு சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன் அதனை நாடாளுமன்றத்தின் விஷேட பெரும்பான்மை மூலம் நிறைவேற்ற முடியும் என சட்டமா அதிபரால் ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது..

இந்நிலையில் இன்று (02) அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட இந்த வரைவிற்கு அனுமதி வழங்கப்பட்டதுடன் அதனை இன்று இரவு விசேட வர்த்தமானியில் அறிவிக்கவும் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.