நகர்ப்புற மேம்பாடு, கடலோர பாதுகாப்பு, கழிவுகளை அகற்றுதல் மற்றும் பொது சுகாதாரமயமாக்கல் இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவவின் ஆதரவின் கீழ் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
கொழும்பு துறைமுகத்திற்கு பயணக் கப்பல்களில் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தங்குமிட வசதிக்காக இந்த கட்டிடம் சொகுசு ஹோட்டலாக மாற்றப்படும் என்று இராஜாங்க அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“கஃபூர் கட்டிடம் இலங்கையில் உள்ள ஒரு பழங்கால மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கட்டிடமாகும். இது 1915 ஆம் ஆண்டில் மாணிக்க தொழிலதிபர் அப்துல் கபூர் என்பவரால் கட்டப்பட்டது. கொழும்பு துறைமுகத்தில் கப்பல்கள் வழியாக வந்த மக்களுக்கு இரத்தினக் கற்களை விற்பனை செய்வதற்காக தனது வணிக ஸ்தாபனத்தின் ஒரு பகுதியாக இந்த கட்டிடத்தை கட்டினார். எனவே, இந்த கட்டிடம் இலங்கைக்கு வரலாற்று மதிப்புமிக்கது ’’ என்று விளக்கினார்.