திருத்தம்: இலங்கையில் 13ஆவது கொரோனா மரணம் பதிவானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

திருத்தம்: இலங்கையில் 13ஆவது கொரோனா மரணம் பதிவானது!


கடந்த செப்டெம்பர் 02ஆம திகதி பஹ்ரைனிலிருந்து வந்த 60 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக, தொற்று நோய் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர உறுதிப்படுத்தியுள்ளார்.

சிலாம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த நபர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

$ads={1}

கடந்த செப்டெம்பர் 02ஆம் திகதி பஹ்ரைனிலிருந்து வந்த குறித்த நபர் கடல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர் எனவும் இலங்கை வந்த அவருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்படாத நிலையில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் கடந்த செப்டெம்பர் 09ஆம் திகதி சிலாபம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட அவர் இன்றைய தினம் (14) மரணமடைந்துள்ளார்.

அவரது மரணத்திற்கான நெருங்கிய காரணம் மாரடைப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.