மனைவிக்கு திருட்டு கடவுச்சீட்டு வழங்கிய நபருக்கு செயலாளர் பதவி வழங்கிய அமைச்சர்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மனைவிக்கு திருட்டு கடவுச்சீட்டு வழங்கிய நபருக்கு செயலாளர் பதவி வழங்கிய அமைச்சர்!!

அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவுக்கு திருட்டுத்தனமாக கடவுச்சீட்டு வழங்கி அதனை நீதிமன்ற விசாரணையில் ஒப்புக்கொண்ட முன்னாள் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளரான சூலானந்த பெரேரா தொழிற்சாலைகள் அமைச்சராக பதவியேற்ற விமல் வீரவன்சவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த கடவுச்சீட்டு விவகார வழக்கு நிலுவையில் இருக்கின்ற நிலையிலேயே அவருக்கு இவ்வாறு செயலாளர் பதவியும் வழங்கப்பட்டிருக்கின்றது.

இதேபோலவே நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் பி.பீ ஜயசுந்தர மற்றும் தற்போதைய பிரதமரின் செயலாளராக உள்ள காமினி செனரத் ஆகியோருக்கும் மோசடி குற்றச்சாட்டுக்கள் விசாரணையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.