பிரபலத்தை தேடும் நோக்கில் எந்தவித பொறுப்புணர்வும் அற்றவகையில் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது மிகவும் வருந்தத் தக்கது.
இதேவேளை பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக தெரிவித்து தன்னுடைய அறிக்கை வெளியிட்ட வைத்தியசாலை நிர்வாகம் இவ்வாறான சம்பவங்கள் எதுவும் இடம்பெற்றிருப்பதாக தகவல் வெளியிட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே சற்று முன்னர் பிரபல இசையமைப்பாளர் A.R ரகுமான் தன்னுடைய சமூக வலைளத்தளத்தில் S.P பாலசுப்பிரமணியம் மீண்டுவர தன்னுடன் இணைந்து பிரார்த்திக்குமாறு பதிவிட்டுள்ளார்.
அதேபோல தென்னிந்திய திரைத்துறை பிரபலங்களும் சமூக வலைத்தளங்களில் அவர் மீண்டுவர வேண்டும் என மன்றாட்டமாக பதிவிட்டுவருகின்றனர்.