இன்று வெளியாகிய ஜனாதிபதியின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று வெளியாகிய ஜனாதிபதியின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!!

புதிய நாடாளுமன்றம் எதிர்வரும் 20ஆம் திகதி காலை 9.30 மணிக்குக் கூடும் என ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 70 ஆவது உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் 20ஆம் திகதி நடைபெறவிருக்கும் பாராளுமன்ற அமர்வில் முதலில் சபாநாயகர் பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகியோர் தெரிவு செய்யப்படுவர் என அந்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என அந்த அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை புதிய சபாநாயகராகப் பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த யாப்பா அபேவர்த்தனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.