பிரபல பாடகர் SPB கவலைக்கிடம்; மருத்துவமனை அதிர்ச்சி அறிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரபல பாடகர் SPB கவலைக்கிடம்; மருத்துவமனை அதிர்ச்சி அறிக்கை!

கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பிரபல பின்னணிப் பாடகர் S.P. பாலசுப்ரமணியம் கவலைக்கிடமாக இருப்பதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவியுள்ள நிலையில் பிரபல சினிமா பின்னணி பாடகர் S.P. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.

தனக்கு கடந்த சில நாட்களாக லேசான காய்ச்சல் இருந்ததாகவும், கொரோனா பரிசோதனை முடிவில் வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

பின்னர், கொரோனா தொற்றுக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், பாடகர் S.P பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.