நாளை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு நீர் வெட்டு அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில், அம்பலாங்கொட, ஹிக்கடுவ, பலபிட்டிய, பென்தொட்ட, எல்பிட்டிய, பட்டபொல, கோனபினுவல மற்றும் பத்தேகம ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பத்தேகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மின் துண்டிப்பு செய்யப்பட உள்ள காரணத்தினால் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.