இன்றைய தினம் ஏற்கனவே 09 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 14 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
நாட்டில் கொரோனா தொற்றுக்கு உறுதியான மேலும் 24 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் தொற்றுறுதியான 2,789 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.
இந்தநிலையில் தொற்றுறுதியான 141 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலங்கையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை என்பதுடன்இ உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக காணப்படுகின்றது.