கல்முனை வைத்தியாசாலைக்கு வெளியே குழப்பநிலை; ஐவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கல்முனை வைத்தியாசாலைக்கு வெளியே குழப்பநிலை; ஐவர் கைது!

குழந்தையை பிரசவித்த பெண்ணொருவர் சில மணிநேரங்களில் உயிரிழந்ததால் இன்று (01) கல்முனை வடக்கு வைத்தியசாலையின் முன்பாக குழப்பநிலை ஏற்பட்டது.

ஆண் குழந்தையொன்றை பிரசவித்த 34 வயது பெண்ணொருவர் உயிரிழந்ததை தொடர்ந்தே வைத்தியசாலையின் முன்பாக குழப்பநிலை உருவானது.

குறிப்பிட்ட பெண்ணின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததை தொடர்ந்து சத்திர சிகிச்சையை மேற்கொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் அவரின் மரணம் குறித்து குடும்பத்தவர்களும் உறவினர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதனை தொடர்ந்து வைத்தியாசாலைக்கு வெளியே குழப்பநிலை தோன்றியதை தொடர்ந்து அதனை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் தலையிட்டனர்.

வைத்தியாசாலைக்கு வெளியே குழப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் செயற்பட்டமை ஐவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.