
ஜம்ஷித் ஷர்மஹ்த் (Jamshid Sharmahd) எனும் இவர் 2008 ஆம் ஆண்டு ஈரானின் ஷிராஸ் எனும் நகரில் பள்ளிவாசலில் 14 பேர் கொல்லப்பட்டு, 21 பேர் காயமடைவதற்கு காரணமான குண்டுத் தாக்குதலின் பின்னணியில் உள்ளவர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
ஈரானில் ஆயுத மற்றும் சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் இவர் எனவும் தற்போது அவர் தற்போது வலிமையான கரங்களில் உள்ளார் எனவும் ஈரானிய புலனாய்வுத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
தொண்டார் (Tondar ) எனும் குழுவின் தலைவரான ஜம்ஷித் ஷர்மஹ்த் அமெரிக்காவைத் தளமாகக் கொண்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவர் எங்கு எப்போது கைது செய்யப்பட்டார் போன்ற தகவல்களை ஈரான் தெரிவிக்கவில்லை.