கொரோனாவுக்கு தடுப்பூசி அக்டோபரில் பயன்பாட்டிற்கு; ரஷ்யா அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனாவுக்கு தடுப்பூசி அக்டோபரில் பயன்பாட்டிற்கு; ரஷ்யா அறிவிப்பு!

உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி சோதனைகள் நிறைவடைந்து விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கடந்த ஆண்டு இறுதி பகுதியில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து தற்போது உலகின் பெரும்பாலன நாடுகளில் கொரோனா தொற்று பரவியிருக்கும் நிலையில், பல லட்சம் மக்கள் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, உலக நாடுகள் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில், கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி சோதனைகள் நிறைவடைந்து விட்டதாக உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இது குறித்து அந்நாட்டு சுகாதார அமைச்சர் கருத்து வெளியிடுகையில்,

"கமலேயா நிறுவனம் (Gamaleya Institute) உருவாக்கியுள்ள தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனைகள் நிறைவடைந்து விட்டன. அடுத்து பதிவு செய்வதற்கான ஆவணப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்துவதற்கு திட்டமிட்டிருக்கிறோம்.

கொரோனாவுக்கு புதிய சிகிச்சை முறையை படிப்படியாக தொடங்க வேண்டும் என்பதால் குறித்த தடுப்பூசியை பயன்படுத்த எதிர்வரும் ஒக்டோபரில் திட்டமிட்டுள்ளொம்." என தெரிவித்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.