கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்! -உலக சுகாதார அமைப்பு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்! -உலக சுகாதார அமைப்பு

எதிர்வரும் காலங்களில் மக்கள் கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம்  தெரிவித்துள்ளார்.

 ஜெனிவாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

கொரோனா தொற்று தொடர்பில் இளைஞர்கள் மத்தியில் முன்னெச்சரிக்கை இல்லை.
கொரோனா தொற்று தம்மை தாக்காது என அசட்டையீனமாக இளைஞர்கள் செயற்படுகின்றனர்.

ஆனால் இளைஞர்களே அதிளவில் கொரோனா தொற்றுக்குள்ளாவதோடு உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

எனவே இதுதொடர்பில் இளைஞர்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும்.
இதேவேளை உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.

கொரோனா பாதிப்பால் மனிதனின் வாழ்கை முடிந்துவிட்டதாக அர்த்தம் கொள்ளக் கூடாது.

மக்கள் இனி கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என டெட்ரோஸ் அதானோம்  மேலும் தெரிவித்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.