ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 335 பேர்! கட்டாரிலிருந்து 14 பேர் நாடு திரும்பினர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 335 பேர்! கட்டாரிலிருந்து 14 பேர் நாடு திரும்பினர்!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) சிக்கியிருந்த இலங்கையர்கள் 335 பேரை ஏற்றிய விமானம், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இன்று (01) அதிகாலை எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK648 எனும் விமானத்தில் அவர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இதேவேளை, கட்டாரிலிருந்து இலங்கையர்கள் 14 பேர் இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

கட்டார் விமான சேவையின் QR 668 எனும் விமானத்தில் அவர்கள் வருகை தந்துள்ளனர்.

இரு நாடுகளிலிருந்தும் வந்த இலங்கையர்கள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும், அதன் பின்னர் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.