வசந்த சொய்சா கொலை சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் இரான் ரணசிங்க எனப்படும் SF. லொக்கா சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
SF. லொக்கா மற்றும் அவரது காதலி காரில் பயணித்து கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த அடையாளம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த துப்பாக்கி சூட்டில் SF. லொக்காவின் காதலிக்கு எவ்வித ஆபத்துக்கும் ஏற்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாதாள உலக பிரதான SF. லொக்கா தனது 32 வயதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
T-56 ரக துப்பாக்கியால் குறித்த தாக்குதல் மேட்கொள்ளப்பட்டு, எட்டு தோட்டாக்கள் பாய்ச்சப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.