ராஜித மற்றும் ரூமிக்கு குற்றப்பத்திரிகை! சரத்குமார மற்றும் அதுல சஞ்ஜீவ பிரதான சாட்சிகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ராஜித மற்றும் ரூமிக்கு குற்றப்பத்திரிகை! சரத்குமார மற்றும் அதுல சஞ்ஜீவ பிரதான சாட்சிகள்!

நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய வௌ்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் பிரதிவாதிகளான முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டது. இது குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த போதே இவ்வாறு குற்றப் பத்திரிகை கையளிக்கப்பட்டது.

இவ்வாறு குற்றப் பத்திரிகை  கையளிக்கப்பட்டதன் பின்னர், பிரதிவாதிகள் இருவரும் தலா 10,000 ரூபா பெறுமதியான ரொக்கப் பிணை மற்றும் 05 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்வதற்கு மேல் நீதிமன்றம் அனுமதித்தது.

சரீரப் பிணையில் கையெழுத்திடும் பிணையாளர், பிரதிவாதிகளின் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டுமெனவும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இதன்போது நிபந்தனை விதித்தார்.

பிரதிவாதிகள் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்துள்ள நீதவான், வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பிரதிவாதிகளின் கைவிரல் அடையாளங்களை பெறுவதற்கு முன்னர், குற்றம் தொடர்பில் அறிக்கையொன்றை தயாரிக்குமாறும் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். இந்த வழக்கின் ஆரம்ப விசாரணை அறிக்கையை மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் மேல் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைகள் அடுத்த மாதம் 22 ஆம் திகதி மீண்டும் இடம்பெறவுள்ளன.

2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி திம்பிரிகஸ்யாய பகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அன்டனி டக்ளஸ் பெர்னாண்டோ எனும் பெயரில் பிரசன்னமாகியிருந்த எஸ்.ஏ.சரத்குமார மற்றும் அதுல சஞ்ஜீவ ஆகியோர் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தமை உள்ளிட்ட 14 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட மா அதிபரால் பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற மஜிஸ்திரேட் விசாரணைகளில் போது சந்தேக நபர்களாக, குறித்த ஊடக சந்திப்பில் கருத்துக்களை வெளியிட்ட எஸ்.ஏ சரத்குமார மற்றும் அதுல சஞ்ஜீவ ஆகியோர், அரச சாட்சியாக மாற்றப்பட்டு மேல் நீதிமன்ற வழக்கில் பிரதான சாட்சியாளர்களாக பெயரிடப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

நன்றி: வீரகேசரி
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.