19ஐ நீக்க சிறுபான்மையின் ஒத்துழைப்பு தேவை இல்லை! எஸ். பி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

19ஐ நீக்க சிறுபான்மையின் ஒத்துழைப்பு தேவை இல்லை! எஸ். பி

19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்குவதற்கு சிறுபான்மை கட்சிகளின் ஒத்துழைப்பு தேவையில்லை என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொத்மலையில் இன்று (29) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

19ஆம் திருத்தத்தின் ஊடாக நாட்டை பிரச்சினைக்குள்ளாக்கினார்கள் என்பதை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே கூறியுள்ளார். சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன அவை வெறுமனே அரசியல் ரீதியான ஆணைக்குழுக்கள் மாத்திரமே ஆகும். அப்போது பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்பட்டமையும் அரசியல் நோக்கம் கருதியது. இவ்வாறான சிக்கல் நிறைந்த 19ஐ நீக்கி 20 கொண்டுவரப்படும்.

உண்மையாகவே 19 ஆம் திருத்தத்தின் ஊடாக அப்போதைய ஜனாதிபதி மைத்திரியின் அதிகாரத்தை குறைத்து ரணிலின் அதிகாரம் கூட்டப்பட்டது. 19ஐ கொண்டுவர தனிப்பட்ட நோக்கமே காரணம். ராஜபக்ஷக்களுக்கு எதிராகவே 19 இன் மூலம்  இரட்டை குடியுரிமையாளர்கள் அரசியலில் ஈடுபட முடியாது என கூறப்பட்டது.அது கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியை இலக்கு வைத்து செய்யப்பட்டது. அதாவது ராஜபக்ஷக்களுக்கு எதிராக செயற்படவும், மைத்திரியின் அதிகாரத்தை குறைத்து ரணில் பலம் பொறுந்தியவராக மாறவே 19 ஆவது அரசியலமைப்பு கொண்டு வரப்பட்டது.

எனவே அதனை ஒழித்து 20ஆவது திருத்தம் கொண்டுவரப்படும். இதற்கு சிறுபான்மை கட்சிகள் எதிர்ப்பை தெரிவிக்கலாம். சிறுபான்மை கட்சிகளே கடந்த மகாண சபை தேர்தல் முறையையும் பிரச்சினையாக்கியுள்ளனர் எனவே சிறுபான்மை கட்சிகள் அதற்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தும் கூச்சலிட்டும் எதிர்ப்பை தெரிவிக்கலாம். ஆனால் நாம் எமது செயற்பாடுகளை முன்னெடுப்போம்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.