PHOTOS: மரம் முறிந்து விழுந்ததில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.

advertise here on top
Join YazhNews WhatsApp Community

PHOTOS: மரம் முறிந்து விழுந்ததில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.

முல்லைத்தீவு - சிலாவத்தை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் கடும் காயங்களுடன் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார்.

முல்லைத்தீவு நகரை அண்டிய பகுதிகளில் இன்று (29) மாலை வீசிய கடும் காற்று மற்றும் மழை காரணமாக மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் மேல் சிலாவத்தை பகுதியில் மரம் ஒன்றின் கிளை ஒன்று முறிந்த வீழ்ந்துள்ளது.

இதன்போது 33 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான கொக்குத்தொடுவாய் மேற்கினை சேர்ந்த இ.ஜெம்.சி விகேந்திரன் என்ற குடும்பஸ்தர் உயரிழந்துள்ளதுடன், நீராவிப்பிட்டியினை சேர்ந்த 21 அகவையுடைய எட்வேட் எமில்டன் என்ற இளைஞன் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் குறித்த சம்பவத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.