பாணந்துறை - பெக்கேகம வாக்கு்சசாவடி நிலையத்திற்கு வாக்களிக்க வருகை தந்த நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
81 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வாக்குச்சாவடியில் வைத்து திடீரென மயங்கி வீழ்ந்த நிலையில், பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் மாரடைப்பினால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதோடு உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.