ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று 5.00 மணிக்கு நிறைவடையவுள்ளது.
இன்று (05) காலை 7.00 மணிக்கு ஆரம்பித்து மாலை 5.00 மணிக்கு வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவு பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் மாலை 2.00 மணியளவில் பல மாவட்டங்களில் 60 வீதமான வாக்குகள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏனைய சில மாவட்டங்களில் 50 வீத வாக்களிப்பு நிறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.