இதுவரை கடும் தேர்தல் சட்டமீறல்கள் எதுவும் பதிவாகவில்லை! -பொலிஸ்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இதுவரை கடும் தேர்தல் சட்டமீறல்கள் எதுவும் பதிவாகவில்லை! -பொலிஸ்

கடந்த சில மணி நேரங்களில் எந்ததொரு பகுதிகளிலும் கடுமையான தேர்தல் சட்ட மீறல்கள் எதுவும் பதிவாகவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்

இன்று (05) தொலைக்காட்சி ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

"தேர்தல் நடைபெறும் வாக்களிப்பு நிலையங்களிற்கு உள்ளேயும் வெளியேயும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே பாதுகாப்பு பிரச்சினை ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. மேலும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக சம்பவங்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை.

மக்களும் அமைதியான முறையில் எந்ததொரு இடையூறும் இன்றி வாக்களிப்பதனை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.