ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் தவிக்கும் இலங்கையர்களுக்கான மகிழ்ச்சி செய்தி!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் தவிக்கும் இலங்கையர்களுக்கான மகிழ்ச்சி செய்தி!!!

இலங்கைக்கு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து மீள் அழைத்துவரும் சிறப்பு விமான சேவையின் (Special Charter Flights) இனிவரும் கால பதிவுகள் அனைத்தும் துபாய் உள்ள மற்றும் அபுதாபியில் உள்ள இலங்கை ஏர்லைன்ஸ் அலுவலகங்களில் மாத்திரமே  நடத்தப்படும் என ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.


கொரோனாவினால் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் சிக்கித் தவிக்கும் ஏராளமான இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு வசதி செய்து தருமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


இந்நிலையிலேயே இவ் ஏற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.


கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் ஏற்பட்ட கொரோனா பரவல் மற்றும் இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற பொதுத் தேர்தலின் விளைவால் நாட்டிற்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் இருமுறை அரசாங்கத்தால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மீள் அழைத்துவரும் பணி மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் துபாயில் உள்ள தூதரக பொது அலுவலகம் ஆகியவை ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் உடன் இணைந்து இலங்கைக்கு திரும்ப வர விரும்புவோருக்கு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

sri lankan airlines charter flights from UAE



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.