வெலிக்கடை சிறையில் இருந்து பல தொலைபேசிகள் மீட்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெலிக்கடை சிறையில் இருந்து பல தொலைபேசிகள் மீட்பு!

வெலிக்கடைச் சிறையில் புதைக்கப்பட்டிருந்த 19 தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

வெலிக்கடைச் சிறைச்சாலை அதிகாரிகளினால் நேற்று (24) விசேட சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன், போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் சிறை வைக்கப்பட்டுள்ள கைதிகளின் அறைக்குள் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இதன்போதே அறைக்குள் புதைக்கப்பட்டு வைத்திருந்த 19 தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் சிறைச்சாலைக்குள் காணப்படும் தடைச் செய்யப்பட்ட பொருட்கள் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் விசேட அவதானம் செலுத்தியுள்ளதுடன், சிறைச்சாலைக்குள் ஏற்கனவே கொண்டுவரப்பட்டுள்ள தடைச் செய்யப்பட்ட பொருட்களை கைப்பற்றுவதற்கும், மேலும் இவ்வாறான பொருட்கள் கொண்டு வரப்படாமல் இருப்பதற்காகவும் சோதனை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதற்கமையவே இவ்வாறான தடைச் செய்யப்பட்ட பொருட்கள் தொடர்ந்தும் கைப்பற்றப்பட்டு வருவதான ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.