பாடசாலைகலுக்கான கட்டுப்பாட்டை தளர்த்த முடிவு! -கல்வி அமைச்சு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாடசாலைகலுக்கான கட்டுப்பாட்டை தளர்த்த முடிவு! -கல்வி அமைச்சு

பாடசாலைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் தற்போதைய நிலைமையினை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், 200 இற்கும் அதிகமான மாணவர்களை கொண்ட பாடசாலைகளில் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களும் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டிய தினம் குறித்து கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய பாடசாலைகளை நடாத்திச் செல்ல முடியுமானால் வழமைபோன்று மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுமதிப்பதற்கு எந்தவிதமான தடையும் இல்லையென கல்வி அமைச்சு பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.