சமூகத்திற்குள் ஊடுருவும் கொரோனா - பாடசாலை மாணவன் ஒருவருக்கு கொரோனா !!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சமூகத்திற்குள் ஊடுருவும் கொரோனா - பாடசாலை மாணவன் ஒருவருக்கு கொரோனா !!

இலங்கையில் இன்று சமூக மட்டத்தில் கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராஜாங்கன பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான பாடசாலை மாணவன் ஒருவர் அடையாளம் காணப்பட்டதாக அந்தப் பகுதி சுகாதார வைத்திய அதிகாரி சந்தியா அபேரத்ன தெரிவித்துள்ளார்.

ராஜாங்கன யாய 5 நவோத்யா வித்தியாலயத்தில் 11ஆம் வகுதிப்பில் கற்கும் 16 வயதுடைய மாணவனுக்கே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அந்த பிரதேசத்தில் முதல் முறையாக கொரோனா தொற்றுக்குள்ளான நபரின் வீட்டிற்கு முன்னால் இந்த மாணவன் வசித்து வருகின்றார்.

$ads={1}
பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 102 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் 101 பேர் ஆரோக்கியமாக உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளான மாணவன் சிரி செவன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

$ads={1}

எனினும் குறித்த மாணவன் கற்கும் பாடசாலையில் உள்ள மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதுவரையில் பாடசாலை மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் ஏனைய பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கவில்லை என தம்புத்தேகம கல்வி வலய இயக்குனர் ஜீ.கே.ஆர்.எம்.கே.பண்டார தெரவித்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.