IPL போட்டிகளை நிறுத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

IPL போட்டிகளை நிறுத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்!

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள IPL தொடரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை நிறுத்த வேண்டும் என உத்தரவிடக்கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

IPL கிரிக்கெட் தொடரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதி முதல் நவம்பர் 10 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந் நிலையில், சட்டத்தரணி ஒருவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் குறித்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

IPL தொடர் வெளிநாட்டில் நடத்தப்பட்டால் இந்தியாவுக்கு பொருளாதார ரீதியான வருமான இழப்பு ஏற்படும் என்பதனால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தொடரை நிறுத்த வேண்டும் என வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.