எந்த அரசாங்கம் வந்தாலும், இந்த ஐந்து விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்! -ஜனாதிபதி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எந்த அரசாங்கம் வந்தாலும், இந்த ஐந்து விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்! -ஜனாதிபதி

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நாட்டின் அபிவிருத்தி சம்பந்தமான விடயத்தில் விசேடமாக அடையாளம் காணப்பட்டுள்ள 5 துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட இந்த 5 துறைகளை சரியான முறையில் நடத்திச் செல்வதற்காக முக்கியத்துவத்தை கொடுத்தே அடுத்த வரவு செலவுத் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தனது சிரேஷ்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

1. நாட்டின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.
2. காணியற்ற மக்களுக்கு காணி உரிமைகளை வழங்க வேண்டும்.
3. மாகாண சுகாதார சேவைகளை முன்னேற்ற வேண்டும்.
4. மாகாண கல்வி சேவைகளை திட்டமிட்டு அபிவிருத்தி செய்தல்.
5. போதைப் பொருள் மற்றும் பாதாள உலகக்குழுக்களை ஒழித்தல்.

என்பனவே ஜனாதிபதி அடையாளம் கண்டுள்ள 5 துறைகளாகும்.

இந்த துறைகளுக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பது என ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது நாடு முழுவதும் பயணம் செய்து மக்களை சந்தித்து கலந்துரையாடி பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையில் இந்த முக்கியமான துறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.