குறித்த வீட்டின் அயல் வீட்டு பெண்ணொருவர் குழந்தையை கடைசியாக பக்கத்தில் உள்ள கால்வாய் அருகே பார்த்ததாகவும், பின்னர் அவர் அங்கு காணப்படவில்லை,என பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்.
தேடுதல் நடவடிக்கையின் பின்னர், குழந்தையின் சடலம் கால்வாயின் அருகே கண்டெடுக்கப்பட்ட பின்னர் இது கலேவல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
பொலிஸ் விசாரணையில் குழந்தையின் கழுத்து பகுதி ஒரு துணியால் நெறிக்கப்பட்டு, அவரது முகம் மணலால் மூடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
இதேவேளை விசாரணைகளின் போது, இறந்த குழந்தை வசிக்கும் வீட்டின் முன் உள்ள கால்வாய் பகுதி போதைப்பொருள் பாவனையாளர்களின் புகலிடமாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஹெராயின் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் குப்பைகள் குழந்தையின் கொலை நடந்த இடத்திற்கு அருகிலும் காணப்பட்டன.
முதற்கட்ட விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை இன்று (01) நடைபெறும்.
மேலும், இறந்த குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கலேவெல பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொலையில் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கண்டறிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.